பஞ்சாபில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசுப்பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள் விநியோகிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது அவர்களின் ஆன்லைன் கல்விகற்றலிற்கு உதவியாக இருக்கும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
இலவச ஸ்மார்ட்போன்கள்:
கொரோனா தொற்றுநோயின் இந்த சூழ்நிலையில் ஆன்லைன் கற்றலை எளிதாக்குவதற்காக மொத்தம் 50,000 ஸ்மார்ட்போன்கள் மாநில அரசு பள்ளிகளின் மாணவிகளுக்கு விநியோகிக்கப்படும். இந்த விநியோகத்தை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வழங்குவார். இது பஞ்சாப் முதல்வரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
கொரோனா நோயாளிகளுக்கு 30 நிமிடத்தில் மருத்துவமனை படுக்கை வசதி – மாநில முதல்வர் அதிரடி உத்தரவு!!
மேலும் அறிவிப்பு வரும் வரை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் மூடப்படும். பள்ளி மீண்டும் திறக்கும் தேதிகள் மத்திய அல்லது மாநில அரசாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தொற்றுநோயின் முழு நிலைமையையும் ஆராய்ந்த பின்னர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க முடிவு செப்டம்பர் மாதத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது