இந்தியா கிட்டத்தட்ட 49,000 புதிய கொரோனா தொற்றுகளை 24 மணி நேரத்தில் பதிவு செய்து உள்ளது. 768 பேர் உயிரிழந்துள்ளனர்.
மீண்டும் சீனாவில்
உலகெங்கிலும் உள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
ஒரே நாளில் 101 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளதால், சீனாவின் இரண்டாவது அலையின் எடுத்துக்காட்டு என்று தோன்றுகிறது. ஆனால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இன்னும் கோவிட் -19 தொற்றுகள் மற்றும் இறப்புகள் மோசமான நிலையிலேயே உள்ளன. அமெரிக்கா, ரஷ்யா,மெக்ஸிகோ என பல நாடுகளில் உயிரிழப்பு மிக அதிகமாகவே உள்ளன.
இது என்ன ஆச்சரியம்!! ⇛⇛ எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் பாத்தீங்களா?? என கூறிய யானை !!
இந்தியாவின் நிலை
இந்தியாவிலும், தினசரி தொற்றுகளில் எண்ணிக்கையில் அதிகரித்துக் கொண்டே வருகிறது, இதுவரை பதிவு செய்யப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை ஏற்கனவே 15 லட்சத்தை தாண்டியுள்ளது.
பல தென் மாநிலங்கள் இப்போது மிகக் கடுமையான எண்ணிக்கையில் தொற்றுகளைக் காண்கின்றன, ஆனால், இந்தியாவில் கொரோனா வைரஸின் ஆரம்ப மையமாக இருந்த மும்பையில் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. டெல்லியும் இந்த மாதத்தில் குறிப்பிடத்தக்க மீட்சியை அடைந்துள்ளது.
தடுப்பூசி வரும் வரை கவனம் அவசியம்
இந்தியாவின் நகர்ப்புறங்களில் தொற்றுகள் குறைந்து வருகின்ற போதிலும், தடுப்பூசி பயன்படுத்தத் தயாராகும் வரை மக்கள் மிகவும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்!!