நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 4 மாதங்களுக்கு ஒரு முறை மூன்று தவணையாக ரூபாய் 2000 வீதம் வருடத்திற்கு 6000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். தற்போது வரை இவர்களுக்கு 15 வது தவணை செலுத்தப்பட்ட நிலையில் இம்மாத இறுதியில் 16 வது தவணை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு PM கிசான் திட்டத்தின் கீழ் பயனடையும் அனைத்து விவசாயிகளும் கூடிய விரைவில் e-KYC ஆவணங்களை சரிபார்க்கும் பணியை முடித்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் 16 வது தவணை செலுத்துவதற்கு முன்பு e-KYC ஆவணங்களை சரி பார்க்கவில்லை என்றால் அவர்களுக்கு நிச்சயம் ரூபாய் 2000 தொகை கிடைக்க வாய்ப்பு இல்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.