இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா தடுப்பு ஊரடங்கு மே 3ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதன் பின்னர் ஊரடங்கை தளர்த்தலாமா? விலக்கிக் கொள்ளலாமா? என அரசு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ரெட்ஜோன் மண்டலங்களை முடக்க மத்திய அரசு திட்டமிட்டு பட்டியலை தயார் செய்து உள்ளது.
மத்திய அரசின் திட்டம்:
மத்திய அரசு நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள 733 மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாக பிரித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு பட்டியலை தயார் செய்துள்ளது. அதில் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் அகமதாபாத் போன்ற பெருநகரங்களை மே 3ம் தேதிக்கு பிறகு எவ்வித நடவடிக்கையும் தளர்த்தப்படாத பகுதிகளின் பட்டியலில் வைத்துள்ளது.
சிவப்பு மண்டலங்கள்:
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 130 மாவட்டங்களை சிவப்பு மண்டலங்களாக அறிவித்து உள்ளது. அந்த பகுதிகளில் மே 3ம் தேதிக்கு பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மேலும் 284 மாவட்டங்கள் ஆரஞ்சு மற்றும் 319 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களில் சேர்க்கப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என கூறப்பட்டு உள்ளது.
நாட்டில் அதிகபட்சமாக மஹாராஷ்டிரா மற்றும் உத்திரப்பிரதேசத்தில் அதிகளவில் சிவப்பு மண்டலங்கள் உள்ளன. சிவப்பு மண்டலங்கள் பட்டியலில் உள்ள 130 மாவட்டங்களும் எவ்வித செயல்பாடுகளும் அனுமதிக்கப்படாமல் முடக்கப்பட்ட உள்ளது. மாநில வாரியாக சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கை,
- உத்திரப்பிரதேசம் – 19 மாவட்டங்கள்
- மஹாராஷ்டிரா – 14 மாவட்டங்கள்
- தமிழ்நாடு – 12 மாவட்டங்கள்
- டெல்லி – 11 மாவட்டங்கள் (அனைத்தும்)
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |