தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்வில்லாமலே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்து உள்ளது.
தேர்வு நடைபெறுமா..?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஏற்கனவே நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்ய வாய்ப்பில்லை என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டதே தவிர ரத்து செய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.
அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளின் விடுமுறை நீட்டிப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!
ஊரடங்கு தற்போது தமிழகத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதால் தேர்வு நடைபெறும் தேதி ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகே அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மே மாதம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |