தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் தமிழகத்தை தொடர்ந்து பிற மாநிலங்களிலும் இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் முதலமைச்சராக உள்ள அசோக் கெலாட், “இனி தமிழகத்தை போலவே ராஜஸ்தானிலும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிவிப்பில் மக்கள் 100 யூனிட் மின்சாரம் மட்டும் பயன்படுத்தினால் கட்டணம் செலுத்த தேவையில்லை.
கேரள மாநிலம் கண்ணூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயிலில் தீ விபத்து., தீவிர விசாரணையில் போலீசார்!!
மேலும் 200 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட்டுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டாம் என்றும், அத்துடன் இதர கட்டணங்களையும் அரசே தள்ளுபடி செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.