இன்று ஜூன் 12 ஆம் தேதி உலகளவில் “குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினம்” கொண்டாட படுகிறது. ஆண்டுதோறும் இந்த தினம் உலகில் உள்ள நூற்றுக்கும் அதிகமான நாடுகள் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் நலன் கருதி:
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்த தினத்தின் நோக்கம் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படக்கூடாது என்பதே ஆகும். 2002 ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடப்படும் இந்த தினம் குழந்தைகளுக்கு நலன் கருதி சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆரம்பித்தது.மேலும் குழந்தைத் தொழிலாளர் மீது உள்ள நெருக்கடியின் தாக்கத்தை முன்னிலைபடுத்தவே ஆகும்.
ஐக்கிய சபை வழங்கி உள்ள அறிக்கை:
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), வழங்கி உள்ள அறிக்கையில் உலகில் 152 கோடி குழந்தைகள் வேலைக்கு உட்படுத்த பட்டதாகவும் அதில் 72 கோடி குழந்தைகள் கடுமையான வேலைக்கு பயன்படுத்த படுவதாகவும் கூறியுள்ளது.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
மேலும்71% குழந்தைகள் விவசாய வேலைகளிலும் 17 % குழந்தைகள் சேவை துறையிலும், 12% குழந்தைகள் தொழில்துறையிலும், அபாயகரமான வேலைகள் ஆன சுரங்க வேலைகளிலும் ஈடுபடுவதாகவும் கூறி உள்ளது.
குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்:
குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம் 2020: கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, இந்த ஆண்டு கொண்டாட்டம் பிரச்சாரத்தின் மூலம் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலகளாவிய மற்றும் விவசாயத்தில் குழந்தைத் தொழிலாளர் ஒத்துழைப்புக்கான சர்வதேச கூட்டாண்மை உடன் கொண்டாட திட்டமிட்டு உள்ளது.
ஜிஎஸ்டி கூட்டத்தொடர் 2020 தொடங்கியது – வரிவிகிதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதா..?
இந்த வருடத்திற்க்கான தீம் என்னும் கரு என்னவென்றால் “குழந்தைகளை குழந்தைத் தொழிலில் இருந்து பாதுகாக்கவும்,முன்னெப்போதையும் விட”.