குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் காவல் நிலையத்தில் டிக் டாக் செய்து வெளியிட்டதால் சஸ்பெண்ட் செய்ப்பட்டார். தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
டிக் டாக்கால் சஸ்பெண்ட்..!
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் காவலர் அல்பிதா சவுத்ரி மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள லங்நாஜ் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2019 ஜூலை மாதம் பணியில் இருந்தபோதே டான்ஸ் ஆடி கொண்டு டிக் டாக்கில் வீடியோ போட்டுள்ளார்.
அந்த வீடியோ வைரல் ஆனதால் விதிகளை மீறி காவல் நிலையத்திலேயே டிக் டாக் வீடியோ எடுத்ததால் அல்பிதாவை துணை போலீஸ் சூப்பிரண்டு மஞ்சிதா வன்சாரா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
குவியும் பட வாய்ப்புகள்..!
இதனை தொடர்ந்து அல்பிதா சவுத்ரி ‘ TikTok ni deewani ‘ என்ற தலைப்பில் ஆல்பம் வெளியிட்டார்.
மேலும் சொந்தமாக இரண்டு பாடல்கள் பாடியதோடு ஒரு வீடியோ ஆல்பத்தில் குஜராத் நடிகருடன் நடித்துள்ளார். பணியிடை செய்யப்பட்ட அல்பிதா சவுத்ரி தற்போது சில நிபந்தனையுடன் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
அல்பிதா சவுத்ரி அவர்களுக்கு சிறு வயதில் இருந்தே நடிக்கவேண்டும் என்பதுதான் ஆசையாம் ஆனால் அவரது அப்பா போலீஸ் அதிகாரியாக இருந்ததால் அதே பணியில் நானும் பணியாற்ற வேண்டும் என்று எண்ணினார்.
அவருடைய டிக் டாக் வீடியோ ஆல்பம் வைரல் ஆனதால் அவருக்கு நிறைய படவாய்ப்புகள் குவியும் வண்ணம் உள்ளன.அவருடைய உயர் அதிகாரிகள் அனுமதித்தால் நிச்சயம் சினிமாவில் நடிப்பேன் என அல்பிதா சவுத்ரி தெரிவித்துள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |