இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருவதால் பல்வேறு நிறுவனங்களும் யுபிஐ சேவையை வழங்கி வருகிறது. அந்த வகையில் சமூக ஊடகங்களில் பெரும் பங்கு வகித்து வரும் வாட்ஸப் நிறுவனம், கடந்த 2020ஆம் ஆண்டு யுபிஐ சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதன்படி இந்தியாவில் யுபிஐ சேவையில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் புதிய அப்டேட்டை விரைவில் செயல்படுத்த உள்ளனர்.
இந்த புதுப்பிப்பின் படி, இந்தியாவில் இருந்து வாட்ஸ்அப் யுபிஐ பேமெண்ட் மூலம் வெளிநாடுகளுக்கும் பணம் அனுப்பும் முறையை கொண்டு வர உள்ளது. இந்த அறிவிப்பு வாட்ஸ்அப் பயனாளர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.