இந்தியாவில் பிரபலமான ஐபிஎல் தொடருக்கான 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக சிவம் துபே 23 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 143 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 37 ரன்களுக்கும், டேவிட் மில்லர் 21 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். இதன் மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
வாட்ஸ்அப் யுபிஐ பயனாளர்களுக்கு நற்செய்தி., இனி இங்கேயும் பணம் செலுத்தலாம்? புதிய அப்டேட்!!!