தமிழகத்தின் கடந்த மாதங்களில் பெய்த கனமழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. இதையடுத்து பருவமழை குறைந்த நிலையில் கடும் குளிர் தொடங்கியது. இந்நிலையில் வானிலை மையம் முன்னறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் காலை நேரத்தில் பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 31 மற்றும் 2.2.2024 ஆம் தேதி தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதை தவிர நீலகிரி மாவட்டத்தின் ஒரே இடங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் மூடுபனி ஏற்பட வாய்ப்புள்ளதாம். மேலும் இன்று மற்றும் நாளை குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 55 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
TNPSC குரூப் 4 தேர்வர்களே…, உங்களுக்கான இந்த “ஆன்லைன் கோர்ஸ்” ஸா யூஸ் பண்ணிக்கோங்க!!