தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னையில் சில முக்கிய பகுதிகளில் இரவு பகல் பாராமல் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும், இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து 29ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் கடலுக்குள் செல்லும் மீனவர்கள் 28ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு இன்று (நவ.27) UPI பேமெண்ட் வேலை செய்யாது? இந்த நேரங்களில் மட்டும்.,