மத்திய அரசு மத நல்லிணக்கத்திற்கு ஊரு விளைவிக்கும் செயல்களை யாரும் செய்யக்கூடாது என பலமுறை எச்சரித்து கொண்டேதான் உள்ளனர். இந்நிலையில் இப்போது சில முன்னணி செய்தி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஒழுங்குமுறை ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இனி வரும் நாட்களில் எந்த ஒரு செய்தி நிறுவனங்களிலும் மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் விதமான தகவல்களை வெளியிட கூடாது. மேலும் இதை எல்லா செய்தி நிறுவனங்களும் கடைபிடிக்கிறார்களா என்பதை மத்திய அரசின் ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஆணையம் கண்காணித்து வருகிறது. ஒரு வேலை இந்த அறிவிப்பை மீறி ஒளிபரப்பும் செய்தி நிறுவனங்களுக்கு நிச்சயம் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
அதன்படி நியூஸ் 18, டைம்ஸ் நவ், நவ்பாரத் மற்றும் ஆஜ்தக் ஆகிய செய்தி நிறுவனங்கள் மதம் சார்ந்த வீடியோக்களை பதிவிட்டதால் அவற்றை உடனடியாக நீக்க உத்தரவிட்டனர். மேலும் இந்த நிறுவனங்களுக்கு 50000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு பற்றி இந்தியா டுடே. மற்றும் டைம்ஸ் நவ் நெட்வொர்க் கூறுகையில் இந்த உத்தரவை நாங்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறோம். வருங்காலத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் செய்திகளை வெளியிடுவோம். மேலும் இந்த உத்தரவு எங்களுக்கு அதிருப்தி கொடுத்திருந்தாலும் நாங்கள் அதை மதித்து செயல்படுவோம் என குறிப்பிட்டுள்ளனர்.