ஒவ்வொரு நாட்டிலும் நிலவும், பொருளாதார வளர்ச்சி, வீழ்ச்சி, ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டே அந்த நாட்டின் வளர்ச்சி விதம் கணக்கிடப்படுகிறது. மேலும், இதனை பொறுத்து தான் நாட்டின் வேலைவாய்ப்பும், சம்பள உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில வருடங்களாக கொரோனா பாதிப்பால் வணிகங்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவை பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்தது.
இதனால், ஊழியர்களுக்கு வழங்கப்படும் சராசரி ஊதியம் குறைந்த அளவே உயர்ந்து வருகிறது. அதாவது, கடந்த 89.1 %- திலிருந்து 3.4 சதவீதம் மட்டுமே உயர்ந்து 85.7% -மாக வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு சராசரியாக 3.58 % ஊதிய உயர்வு வழங்க உள்ளதாக ஜப்பானில் உள்ள பெரிய நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இதன்முலம், மூன்று தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு அதிக அளவு உயர்ந்துள்ளதாக தொழிற்சங்கக் குழு ரெங்கோ தெரிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
மனித கழிவுகளை அகற்றும் பணியின் போது இறந்தவர்களில் தமிழ்நாடு முதலிடம் .., வெளியான முக்கிய அறிவிப்பு!!