விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் சீரியலில் இப்பொழுது சக்தி தனது உயிரையே பணயம் வைத்து வருணின் உயிரை காப்பாற்ற போராடி வருகிறார். அதாவது நெருப்பு மூலமாக தான் வருணுக்கு இத்தனை நாட்கள் பிரச்சனை இருந்து வந்தது.
தனது அம்மாவை காப்பாற்ற முடியவில்லையே என்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சக்தி வந்தவுடன் தான் வருணுக்கு கொஞ்சம் கொஞ்சமாக குணமடைய ஆரம்பித்தது. ஆனால் அதையும் கெடுக்கும் விதமாக விஸ்வநாதன் குடும்பமே சதி செய்து மீண்டும் வருணின் மனநிலையை மாற்றி விட்டனர்.
அஜித் உச்சத்தை தொட இந்த பிரபலம் தான் உதவினாரா?? இத்தனை நாள் இது தெரியமா போச்சே!!
இப்பொழுது சக்தி அந்த நெருப்பு மூலமே அவருக்கு குணமடைய சில வேலைகளை செய்துள்ளார். அதாவது நெருப்புக்குள் மாட்டிக்கொண்டது போல சக்தி உள்ளே இருந்து கத்த வருண் அம்மா என்று கத்தி கொண்டே நெருப்புக்குள் நுழைந்து சக்தியை காப்பாற்றி மயங்கி விழுகிறார். அதன் பிறகு வருணுக்கு குணமாகுமா?? ஆகாதா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.