விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில், ராதிகாவை தான் கோபி காதலிக்கிறார் என்ற உண்மையை தெரிந்து கொண்ட பாக்கியா மயங்கி விழுந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய எபிசோட்:
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபியின் மனைவி என்று சொல்லி வேறு ஒரு பெண் வந்திருப்பதாக பாக்யாவிடம் நர்ஸ் சொல்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாக்யா அந்த பெண் யார் என்பதை தெரிந்து கொள்ள, கோபி அட்மிட் செய்யப்பட்டிருக்கும் வார்டுக்குள் நுழைகிறார். அப்போது கோபி ராதிகாவின் கையை பிடித்துக் கொண்டு அருகில் அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
நீ இல்லை என்றால் நான் செத்துருவேன் என கோபி சொல்வதைக் கேட்டு பாக்யாவுக்கு தலைசுற்ற ஆரம்பிக்கிறது. கோபி பேசுவதை கேட்ட ராதிகா நீங்கள் விரைவில் குணமாகி வரவேண்டும் என கவலையுடன் தெரிவிக்கிறார். இதைக் கேட்ட பாக்யா ஒரு கட்டத்தில், தலைசுற்ற அந்த ரூமில் இருந்து வெளியே வருகிறார். இந்த நிலையில் ராதிகாவின் அண்ணன் போன் செய்து கோபி எப்படி இருக்கிறார் என கேட்கிறார். மறுபக்கம் இனியா கோபிக்கு போன் செய்ய அவரது போன் சுவிட்ச் ஆப்பில் உள்ளது என தெரிவிக்கிறார்.
இதனால், டென்ஷன் ஆன ராமமூர்த்தி தாத்தா அவன் எங்கேயாவது போய் தொலைந்து இருப்பான் என கோபியை வசை பாடுகிறார். இதையடுத்து மீண்டும், கோபி மனைவி யார் என கேட்கும் போது நான் தான் என கூறிக்கொண்டு ராதிகா செல்கிறார். இதைப் பார்த்து பாக்கியா வெறுத்துப் போகிறார்.
குடித்துவிட்டு வந்து கோபி தன்னை பிடிக்கவில்லை என சொல்லியதையும், தான் நம்பிய ஒருவர் தன்னை ஏமாற்றி விட்டதாக ராதிகா சொன்னதையும் நினைத்துக் கொண்டே கவலையுடன் மருத்துவமனையை விட்டு வெளியே வருகிறார். இந்த காட்சிகள், இன்றைய எபிசோடுகளில் காட்டப்பட உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்