பெற்ற மகளை ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற கொடூர தாய் – போலீசிடம் சிக்கிய சம்பவம்..!

0

பிறந்து ஏழே நாளான சொந்த மகளை ரூ.10 ஆயிரத்துக்கு பக்கத்து வீட்டு பெண்ணிடம் விற்ற தாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொடூர தாய்..!

உத்தரப் பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவட்டம் கத்கர் பகுதியில் வசிக்கும் அந்த பெண்ணிற்கு திருமணம் மூன்று ஆண்டுகள் கடந்த அந்த பெண்ணுக்கு ஜனவரி 4 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. அவரது கணவர் பிரிந்து சென்றதை அடுத்து பச்சிளம் குழந்தையை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டத்தில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து குழந்தையை தத்தெடுக்க பக்கத்து வீட்டு பெண் ரேகா முன்வந்துள்ளார். முத்திரைத் தாளில் தத்தெடுப்பு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு குழந்தையின் தாய் சம்மதத்திற்காக ரூ.10 ஆயிரம் கொடுத்துள்ளார்.

வழக்குப்பதிவு..!

பக்கத்துக்கு வீட்டு பெண் ரேகா ஜனவரி 8 ஆம் தேதி குழந்தை இறக்கும் தருவாயில் இருந்தபோது சிறுமியை தத்தெடுத்து காப்பாற்றி வந்துள்ளார். தற்போது பெற்ற தாய் விற்ற தனது மகளைத் திரும்பப் பெற விரும்புவதாகக் கூறி அந்தப் பெண் எஸ்.எஸ்.பி அலுவலகத்திற்கு புகார் தெரிவித்ததை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here