புத்தாண்டை முன்னிட்டு இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிகளை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு
பொதுவாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்றால் புதிய ஆடைகளை அணிந்து, பிடித்த கோவிலுக்கு சென்று இந்த வருடம் நல்லதாகவே அமையட்டும் என்று மக்கள் வேண்டி கொள்வது கால காலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் சமீப காலமாக, புத்தாண்டுக்கு முதல் நாள் இரவில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அலப்பறை கொடுத்து சாகசம் செய்வது வழக்கமாக நடந்து வருகிறது. இதனால சில உயிர் சேதங்களும் அவ்வவ்போது ஏற்பட்டு வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போக்குவரத்து காவல்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது, நாளை மாலை 6 மணி முதல் இருசக்கர வாகனங்களில் இரண்டு நபருக்கு மேல் பயணிக்க கூடாது.
ஊழியர்களுக்கு குட் நியூஸ்., லீவு நாட்களில் தொந்தரவு செய்தால் 1 லட்சம் அபராதம்! கறார் அறிவிப்பு!!
அறிவிப்பை மீறி நடந்து கொண்டால் வாகனங்கள் பறிக்கப்படும் . அதுமட்டுமின்றி புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரவு நேரங்களில் யாரும் பைக் ரேஸ் போன்ற சாகசத்தில் ஈடுபட கூடாது. அதையும் மீறி செயல்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.