கடந்த சில மாதங்களாக வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கி மக்களை வெள்ளத்தில் மூழ்கடித்திருந்தது. இந்நிலையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
இதோடு குமரிக்கடல், மன்னார் வளைகுடா, மாலத்தீவு, அரபிக்கடல் ஒட்டிய பகுதியில் சூறாவளி காற்று 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் இன்று மற்றும் நாளை மேற்குறிய பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தமிழகத்தில் பெண் போலீசாருக்கு துப்பாக்கி தேவையில்லை., பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட கமிஷனர்!!!