தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் பலரும் இந்த வெயிலின் தாக்கத்தை குறைக்க மழை பெய்யாதா என மிகவும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 20.3.2024 முதல் 23.3.2024 தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் மார்ச் 18 மற்றும் மார்ச் 19 ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையை நிலவ கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரையில், வானம் ஓரளவுக்கு மேகமுட்டத்துடனே இருக்குமே தவிர அதிக பட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.