தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர்.