கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை புது புது உச்சத்தை தொட்டு மக்களை அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த வித மாறுதலும் இல்லாமல் தொடர்ந்து நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.
கொரோனா என்னும் பெருந்தொற்று அதன் கோர முகத்தை காட்டி மக்களை சொலமுடியாத பல இன்னல்களை தந்தது. இந்நிலையில் அதன் பரவல் குறைந்து மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். இந்த தருணத்தில் அவர்களின் அன்றாட தேவைக்கு பயன்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்து உள்ளது. இந்த விலை உயர்வை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.
இதன் விலையை பொது எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் தினமும் மாற்றி அமைக்கின்றனர். மேலும் கூடுதலாக மத்திய அரசின் வரி விதிப்பும் அதனுடன் சேர்ந்து விடுகிறது. அந்த வகையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றத்தையும் சந்திக்காமல் தொடர்ந்து இரண்டாவது நாளாக அதே விலையில் நீடிக்கிறது. அதாவது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்