ஜீ தமிழ் ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்று யாரடி நீ மோகினி. 2017 ஆம் ஆண்டு முதல் வித்தியாசமான கதை களத்துடன் ரசிகர்களின் பேராதரவுடன் இந்த தொடர் ஒளிபரப்பட்டு வருகிறது. 1200 எபிசோடுகளை கடந்த இந்த சீரியல் விரைவில் முடியவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.
இந்த தகவலால் கிளைமாக்ஸ் எப்படி இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் தற்போது எதிர்பார்த்து இருக்கின்றனர். தற்போது இந்த சீரியல் பற்றி மற்றுமொரு சுவாரசியமான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது யாரடி மோகினி சீரியலில் இரண்டாம் பாகத்தை விரைவில் அறிமுகம் செய்ய நாடகக்குழு முடிவு செய்துள்ளது.
தற்போது சீரியல் குழு இரண்டாம் பாகத்திற்கான பூஜையை போட்டுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு இந்நாடகத்தின் வில்லியான சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் யாரடி நீ மோகினி சீரியல் குழுவுடன் இணைந்து எடுத்த செல்பியை பகிர்ந்து உங்களை நான் மிகவும் மிஸ் செய்வேன் எனத் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அந்த சீரியல் முடிவுக்கு வருவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
யாரடி நீ மோகினி சீரியல் முதல் பாகம் முடியவிருப்பதாக கவலையில் உள்ள ரசிகர்கள் தற்போது இந்த இரண்டாம் பாகம் தொடங்க உள்ள தகவலை கேட்டு குஷியில் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்