சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் கலக்கமடைந்து உள்ளனர்.
விலை உயர்வு காரணம்..!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் நிறைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் வர்த்தகம் மற்றும் வியாபாரம் குறைந்துள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிகளவு முதலீடு செய்கின்றனர். இதுவே தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.
இன்றைய விலை..!
சென்னையில் இன்று ஒரு சவரனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ. 33,088-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரலாற்றில் முதல் முறையாக தங்கத்தின் விலை 33 ஆயிரத்தை தாண்டுவது குறிப்பிடத்தக்கது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |