அரசு பள்ளிகளில் திறமையான ஆசிரியர்களுக்கு பணி வழங்கிட வேண்டி, தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (TNTET) நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2011 இல் அறிமுகமான இந்த TET தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கே ஆசிரியர் பணி வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், காலப் போக்கில் பணி நியமனத்திற்காகவும் TET தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர், பணி நியமனத் தேர்வை எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த பணி நியமனத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆசிரியர்கள் பலவித போராட்டங்களை நடத்திய நிலையில், தற்போது காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் “அடிப்படை உரிமைக்காக ஆசிரியர்களை வீதியில் இறங்கி போராடும் நிலைக்குத் தள்ளிய, அதிமுக அரசு கடைப்பிடித்த ஆசிரியர்களுக்கு எதிரான போக்கை திமுக அரசும் தொடர்வது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமை யாகும்” என எதிர்வித்துளளார்.
தமிழக மகளிர் ரூ.1,000 உரிமை தொகை திட்டம்: விரிவாக்கம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு?