தமிழகத்தில் பேருந்து பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்யப்பட உள்ளதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தனர். அதன்படி தற்போது சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் தாழ்தள பேருந்து இயக்கத்தின் சோதனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் இம்மாதம் (ஏப்ரல்) இறுதிக்குள் சாலைகளில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் MTC தவிர, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கு தலா 100 தாழ்தள பேருந்துகளை வாங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.., வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!!!