கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வுக்கு நடப்பு வருடம் மார்ச் 24ஆம் தேதி முடிவுகள் வெளியாகி இருந்தன. காலதாமதமாகி வெளிவரப்பட்ட இந்த TNPSC குரூப் 4 தேர்வின் முடிவில் சில குளறுபடியும் உள்ளாதாக புகார்கள் எழுந்து வந்தன. இதையடுத்து தேர்வர்கள் சிலர் மதுரை உயர்நீதிமன்றத்தில், “உரிய தீர்வு கிடைக்க வேண்டும்” என்றும், “அதுவரை பணி நிரப்ப கூடாது” என்றும் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இன்று விசாரணைக்கு வரப்பட்ட இந்த வழக்கிற்கு, குரூப் 4 தேர்வுக்கான இறுதி செய்யப்பட்ட விடைத்தாளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செயலாளர் நாளை (அக்டோபர் 11) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு வரும் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Course Pack Details
TNPSC குரூப் 4 தேர்வில் நன்கு பயிற்சி பெற்று வெற்றி பெற பிரபல Examsdaily நிறுவனம் ரூ. 7,500 மதிப்பில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட course pack-ஐ வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி கொள்ள கீழே உள்ள லிங்க்கை லீக் செய்தும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்தும் தேர்வு தயாராகுங்கள்.
TNPSC GROUP 4 ONLINE COURSE APPLY NOW