TNPSC Group 4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதில் பலருக்கும் தேர்வு முடிவுகள் வரவில்லை என புகார் அளித்து வருகின்றனர்.
TNPSC
TNPSC கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் குரூப் 4 போட்டித் தேர்வை நடத்தியது. சுமார் 7000 பணியிடங்களுக்கு 22,02,942 பேர் விண்ணப்பித்ததில் 18,36,535 பேர் தேர்வை எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் 23 ஆம் தேதி வெளியான நிலையில் அதில் பல குளறுபடிகள் இருப்பதாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் தற்போது ஒரு திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது 18,36,535 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் இதில் கிட்டத்தட்ட 5 லட்சம் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வரவில்லை என புகார் அளித்துள்ளனர்.
ஹலோ நான் தகுதியான குடும்பத்தலைவி பேசுறேன்.., அந்த ரூ.1000?? இணையத்தில் ட்ரெண்டிங்காகும் மீம்ஸ்!!
இதுகுறித்து TNPSC தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கையில், தேர்வு எழுதிய மாணவர்களில் பலரும் தமிழ் மொழியில் 40 க்கும் குறைவாக மதிப்பெண் எடுத்துள்ளனர். முக்கிய பாடப்பிரிவில் இவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறாததால் இவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என TNPSC விளக்கம் அளித்துள்ளது.