தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் இன்றும் (ஆகஸ்ட் 14) நாளையும் (ஆகஸ்ட் 15) இடி மின்னலுடன் கூடிய மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது, இன்றைய வானிலை நிலவரப்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இன்று (ஆகஸ்ட் 14) சென்னை மற்றும் அதன் புறநகரங்களை பொறுத்த வரையில், வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். இருப்பினும், நேரம் செல்ல செல்ல ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி எது தெரியுமா?? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!!