தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி உருவாகி உள்ளதால் அடுத்த ஏழு நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை மாற்றத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று (ஜனவரி 24) முதல் ஜனவரி 30 ஆம் தேதி வரை வறண்ட வானிலையை நிலவும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில், வானம் ஓரளவுக்கு மேக மூட்டத்துடனே இருக்குமே தவிர நகரின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்துடனே காட்சி அளிக்கும்.அதிகபட்ச வெப்ப நிலையே 32 டிகிரி செல்சியஸ்ஸாக தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வானிலை மாற்றம், எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் அளிக்கப்படவில்லை.