தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றத்தால், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக மழை வெளுத்து வாங்கி வந்தது. இந்நிலையில், தென்னிந்திய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
மேலும், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு வரும் அக்டோபர் 23 ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இப்போ வெங்காயத்தின் விலை எவ்வளவு தெரியுமா?? கதிகலங்கும் இல்லத்தரசிகள்…, முழு விவரம் உள்ளே!!