தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி முதல் கனமழை வெளுத்து வாங்கியதுடன், மிக்ஜாம் புயலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றது. இந்த புயலின் தாக்கத்தால், மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். இதையடுத்து, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வெள்ள நிவாரண தொகையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6000 வழங்கி வருகிறார். இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மிக்ஜாம் புயல் வெள்ள தாக்கத்தை “தேசியப் பேரிடராக அறிவிக்க சட்டம் இடமில்லை” என்று கூறியுள்ளார்.
இவரது இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 9 வருட ஆட்சியே மிகப்பெரிய ஒரு பேரிடர் என்பதால் இதனை தனியாக ஒரு பேரிடராக பார்க்க மாட்டோம் என்ற எண்ணத்தில் கூறியிருப்பார் என சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பார்த்தாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இவர், “மரியாதை குறைவாக யாரும் பேசவில்லை; பேரிடருக்கான நிதியை தான் கேட்டேன்; யாரையும் தவறாக பேசவில்லை; எனக்காக எதையும் நான் கேட்கவில்லை தமிழ்நாட்டு மக்களுக்காகவே கேட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
வாகன ஓட்டிகளே., இனி சுங்கச்சாவடியில் நிற்க வேண்டியது இல்லை? மத்திய அரசு மாஸ் அறிவிப்பு!!!