தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக, ரூ.109 கோடி தொகையை விடுவிப்பதாக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு அறிவிப்பு:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், ஏற்படும் ஆசிரியர் பணிகளுக்கான காலி பணியிடங்கள் அனைத்தும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் பற்றாக்குறையை போக்குவதற்கு, தொகுப்பூதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால், ஆசிரியர் மற்றும் கல்வித்துறை சார்ந்த பிற பணியாளர்கள் சிலருக்கு கடந்த மூன்று மாத காலமாக சம்பளம் வழங்காமல் அரசு காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க ரூபாய் 109 கோடி நிதியை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால், இவர்களுக்கான ஊதியம் விரைவில் சம்பந்தப்பட்டவர்களின் கைக்கு சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அனைத்து தற்காலிக ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.