தமிழகம் முழுவதும் பணிபுரியும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த, பகுதிநேர ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஆசிரியர் சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெறுவதாக தெரிவித்தனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களுடன் போராட்டத்தை கைவிட பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மேலும் தற்போது நிதி பற்றாக்குறை உள்ளிட்ட சிக்கல்கள் உள்ளதால் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது. ஆனால் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்தனர். இது குறித்து ஆசிரியர் சங்கங்கள் கூறுகையில் பள்ளி கல்வித்துறை உடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் கிடைக்கவில்லை. இதனால் நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தின் முடிவிலாவது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா?? என்ற கேள்வி எழுந்துள்ளது.