கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் இயங்கும் நேரத்தை மாற்றி அமைப்பது குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு :
தமிழகத்தில் கடந்த, இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றது. இதையடுத்து 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிந்து விடைத்தாள் திருத்தும் பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோடை விடுமுறைக்கு பின் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைப்பது குறித்து பெற்றோர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். விரைவில் இந்த கோரிக்கை குறித்து முதல்வருடன் ஆலோசித்து, முடிவு அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அமைச்சரின் இந்த உத்தரவு தற்போது, மாணவர் மற்றும் பெற்றோருடைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்