இஸ்லாமிய மதத்தினருக்கு எதிராக பேசப்பட்ட கருத்துக்கள் அசாம் மாநிலத்தில் வன்முறையாக வெடித்ததால், தற்போது மாநிலத்தில் உள்ள 4 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தடை உத்தரவு அமல் :
இஸ்லாமிய மதத்திற்கு எதிராக, தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் நாடு முழுவதும் வன்முறையை தூண்டியுள்ளது. இதனால் அசாம் மாநிலத்தின் சில பகுதிகளில், வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதையடுத்து, மாநிலத்தின் பொது அமைதிக்காக கச்சார், கரீம்கஞ்ச், ஹைலகண்டி மற்றும் போங்கைகான் உள்ளிட்ட மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்ட பாஜக தலைவர் நூபுர் ஷர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது இடத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவதற்கும், மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி கூட்டத்தைக் கூட்ட அனுமதி இல்லை என்றும், பேரணிகள் ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக வும் கச்சார் மாவட்ட நிர்வாகத்தின் உதவி துணை ஆணையர் தீபக் ஜிதுங் அறிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்