தமிழகத்தில், அரசு புதிதாக அறிவித்த திட்டத்தின் நிலை குறித்து, கோவை மாநகராட்சியில் உள்ள பள்ளிகள் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
பள்ளிகளில் ஆய்வு :
தமிழகத்தில் மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை வருகிற 15ம் தேதி முதல்வர் துவக்கி வைக்க உள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மாநில முழுவதும் உள்ள 1,545 அரசு தொடக்க பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது கோவை மாநகராட்சியில் உள்ள 62 பள்ளிகளில், இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
தனியார் உணவகங்களில் தயாரிக்கப்படும் இந்த சிற்றுண்டி, உரிய நேரத்தில் மாணவர்களுக்கு சென்றடைகிறதா? இதனால் எத்தனை மாணவர்கள் பயனடைகின்றனர் என்பதை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து, காலை 7.30 மணிக்குள் சரியான நேரத்தில் உணவுகள் சென்று விடுவதாகவும், தரமான காலை உணவு வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.