தமிழக பள்ளி மாணவர்களுக்கு அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிப்பை வெளியிட்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
தமிழகத்தில் காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு, அடுத்த பருவத்திற்கான வகுப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் 24ஆம் தேதி, தீபாவளி பண்டிகை காரணமாக பள்ளி மாணவர்களுக்கு சனி ஞாயிறு மற்றும் திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த விடுமுறையை நீட்டித்து, அக்.25ம் தேதியான செவ்வாய்க்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இந்த நிலையில் சமீப தினங்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது.
பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(21.10.2022) – முழு விவரம் உள்ளே!
இந்த கனமழை காரணமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிப்பதாக, நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மழை காரணமாக, இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.