தமிழக பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை – வகுப்பறைக்குள் இதற்கு அனுமதி இல்லை! கல்வித்துறை அதிரடி!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை - வகுப்பறைக்குள் இதற்கு அனுமதி இல்லை! கல்வித்துறை அதிரடி!!

தமிழகத்தில், கடந்த 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்போனுடன் வர அனுமதி இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

 கல்வித்துறை அறிவிப்பு :

தமிழகத்தில், 2022-23 ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி தேதியான திங்கட்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 1 முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். அதுபோக, இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போக, பள்ளி மாணவர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மூலம் உளவியல் பயிற்சி, புத்தாக்க பயிற்சி, விழிப்புணர்வு பயிற்சி போன்றவை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்போனுடன் வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக வும், அவ்வாறு வரும் மாணவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோக பறிமுதல் செய்யப்படும் செல்போன்கள் திரும்பி வழங்கப்படமாட்டாது என்று பள்ளிக்கல்வித்துறை உறுதியளித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here