தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டான 2022-23 ல் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும் என்று மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
கல்வித்துறை அறிவிப்பு :
தமிழகத்தில், கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. புதுப்பொலிவுடன் மாணவர்கள் நேற்று முதல் பள்ளிக்கு செல்ல துவங்கினர். பள்ளி துவங்கிய ஒரு வாரத்திற்கு, அதாவது இந்த வாரம் முழுவதும் புத்தாக்க பயிற்சிகளை அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுபோக இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து, நடப்பு கல்வியாண்டில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சனிக்கிழமை தோறும் விடுமுறை அளிக்கப்படும் என்றும், வாரத்தில் 5 நாள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுபோக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சனிக்கிழமை மட்டும் வகுப்புகள் நடத்தப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு பெற்றோர் மற்றும் மாணவர் இடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்