தமிழக குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட இருக்கும் மகளிர் உரிமை தொகை ரூ. 1000 என்ற திட்டத்திற்கான, முதல் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்திற்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள், கடந்த ஜூலை 24ம் தேதி முதல் 20,765 ரேஷன் (நியாய விலை) கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைதார்களுக்கு நடைபெற்று வருகின்றன. இந்த முதல் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த திட்டத்திற்கான பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடுவீடாக சென்று விண்ணப்பங்களை விநியோகம் செய்து வருகின்றனர். இத்தகைய பணிகள் இடைநிறுத்தம் ஆக கூடாது என்பதால், வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் செயல்படும் என உணவுத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், இதனை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 26 ம் தேதி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களே., இந்த நாளில் மட்டும் “Bag” தேவையில்லை? கல்வித்துறை அறிவிப்பு!!!