தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில், விரைவில் கூகுள் பே எனப்படும் ஆன்லைன் பரிவர்த்தனை முறைகளை கொண்டு வர, ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூட்டுறவு துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
அமைச்சர் அதிரடி :
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில், குறிப்பிட தகுந்த முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. முறைகேடுகளை தடுக்கவும், நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல அதிரடி திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதுகுறித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, தற்போது வரை ரூ.3,696 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இது போக நகைக்கடை தள்ளுபடி பெறாதவர்களுக்கான இறுதி வாய்ப்பு குறித்தும், வெளி சந்தையில் காய்கறிகள் விலை கடுமையாக உயரும் போது, பசுமை சந்தை மூலம் காய்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.
தமிழக மக்களுக்கு அலர்ட்.,, நாளை இந்த பகுதிகளில் பவர் கட்.,, மின்வாரியம் அறிவிப்பு!!
இது போக மாநிலத்தில், முதற்கட்டமாக 10 ரேஷன் கடைகளில் கூகுள் பே மூலம் பணம் செலுத்தி ரேஷன் பொருட்களை பெறும் வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விரைவில் இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளதாக அரசின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் ரேஷன் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.