முக்கிய தூண்களை ஒதுக்கும் BCCI.., கேள்விக்குறியாகும் வீரர்களின் வாழ்க்கை.., இனியாவது வாய்ப்பு கிடைக்குமா??

0
முக்கிய தூண்களை ஒதுக்கும் BCCI.., கேள்விக்குறியாகும் வீரர்களின் வாழ்க்கை.., இனியாவது வாய்ப்பு கிடைக்குமா??

இந்திய அணியில் சில முக்கிய வீரர்களை BCCI தொடர்ந்து புறக்கணித்து வருவதால் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குகிறது.

கிரிக்கெட் கேரியர்

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 போட்டியில் வெற்றி பெறாது என அனைவரும் நினைத்தனர். ஆனால் அந்த நினைப்பையெல்லாம் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று தகுடுபிடியாகியது. இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியுடன் T20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. ஆனால் இந்த தொடரில் இந்திய அணியின் முக்கிய மூன்று வீரர்களை BCCI ஒதுக்கி வைத்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது ஷிகர் தவான், சுப்மன் கில், புவனேஷ்வர் குமார் ஆகிய வீரர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை. இதில் ஷிகர் தவான், ஒரு காலத்தில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கி பல சதங்கள் குவித்து அதிரடி காட்டினார். இதனை தொடர்ந்து வளர்ந்து வரும் வீரர்களில் ஒருவரான சுப்மன் கில் பல சர்வதேச போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் திறமை கொண்டவர்.

IND vs SA T20.., முக்கிய வீரருக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்?? உண்மையை உடைத்த BCCI!!

அதே போன்று புவனேஷ் குமாரும் சிறந்த பவுலர் தான். ஆனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சுமாராக விளையாடியதால் தென்னாப்பிரிக்க தொடரில் இடம்பெறவில்லை. மேலும் இது போன்ற சிறந்த வீரர்கள் முக்கிய தொடர்களில் இடம்பெறாததால் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் இனி வரும் போட்டிகளிலாவது வாய்ப்பு கிடைக்குமா என பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here