பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தை நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகத்தில் மாறுபாடு நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இன்று (அக்டோபர் 14) மிதமான மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக, அடுத்த 3 மணி நேரத்திற்குள் தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை , ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 14) மிதமான மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு துறைகளில் இந்த ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு., முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!!