தமிழக பள்ளி பொது தேர்வு மாணவர்களே…, இனி இத மட்டும் நீங்க பார்த்தா போதும்…, அன்பில் மகேஷ் வெளிப்படை!!

0
இனி இத மட்டும் நீங்க பார்த்தா போதும் அன்பில் மகேஷ் வெளிப்படை!!
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை கடந்த மாதம் வெளியானது. இதன்படி, வரும் மார்ச் மாதமே தொடங்க உள்ள இந்த பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தீவிரமாக தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, பொது தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக புத்தக வடிவில் வினா-வங்கி வழங்கப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா பரவலுக்கு பின்னர் அது தயார் செய்யப்படாமல் இருந்தது. மீண்டும் வினா வங்கி தயார் செய்து வரும் ஜனவரி மாதம் முதல் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here