தேர்தல் எதிரொலி: தமிழக அதிகாரிகளுக்கு புதிய உத்தரவு., தேர்தல் ஆணையர் சத்யபிரதா கறார்!!!

0

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் தேதிகள் வெளியாகும் நிலையில், கடந்த காலங்களில் ஏற்பட்ட தவறுகளை திருத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் வெளியான பிறகும் கூட, ஒரு சில உத்தரவுகள் முன் தேதியிட்டு வெளியிடப்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, அனைத்துத் துறை செயலா்களுக்கும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தியன் சூப்பர் லீக்: அடி பணிந்த ஜாம்ஷெட்பூர் …, அசத்திய ஏடிகே மோகன் பகான் அணி!!

அதாவது “இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதிகள் வெளியான பிறகு, தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிடும். அதன்பின்னர் புதிய திட்டங்கள், உத்தரவுகளை வெளியிடக்கூடாது. எனவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அடுத்த 2 மணி நேரத்திற்குள் கடைசியாக வெளியிடப்பட்ட  உத்தரவு விவரங்களை குறிப்பிட்டு, கீழே நீளமான கோடு வரைய வேண்டும். அதனை நகலெடுத்து தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.” என அறிவுறுத்தி உள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here