தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைய உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்து கொண்டு தான் இருக்கும் என தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளவும் அறிவுறுத்தி உள்ளனர்.