தமிழகத்தில் குழந்தைகளை தாக்கும் காய்ச்சல் – இதுவரை 282 பேர் பாதிப்பு! சுகாதாரத்துறை அமைச்சர் பகீர்!!

0

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 283 க்கும் மேற்பட்ட குழந்தைகள், H1N1 என்ற வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

சுகாதாரத்துறை அறிவிப்பு :

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக, கொரோனா வைரஸ் பரவல் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த வைரஸ் பரவல் முடிவுக்கு வருவதற்கு முன்பே, தொடர்ந்து பல புதிய நோய்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும், குழந்தைகளை தாக்கக்கூடிய காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதுகுறித்து பேசிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் இன்ஃப்ளுயன்சா என்ற புதிய வகை காய்ச்சலால் அரசு மருத்துவமனைகளில் 13, தனியார் மருத்துவமனையில் 215, வீட்டுத் தனிமையில் 54 என மொத்தம் 282 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அமைச்சர் பேட்டியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here