இந்திய அணி T20 உலக கோப்பை தொடருக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் கடினமான அணிகளுடன் மோத இருக்கும் காரணத்தால் இறுதி போட்டிக்குள் இந்தியா நுழைவது கேள்விக்குறியாக உள்ளது.
யாருடன் மோதுகிறது?
16 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் அடுத்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 23 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்த 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தகுதி சுற்று அடிப்படையில் மோத உள்ளனர். இதில் குரூப் B பிரிவில் பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளனர். இதில் இந்தியா தனது முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்த முதல் ஆட்டத்திலே இந்தியா வெற்றி பெறுவது சந்தேகமாக தான் உள்ளது. ஏனென்றால் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வி அடைந்ததன் மூலம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது. மேலும் இதே பிரிவில் இடம் பிடித்துள்ள பங்களாதேஷ், நியூசிலாந்து ஆகிய அணிகளிடம் இந்தியா பல முறை தோல்வி அடைந்துள்ளது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
மேலும் இந்த குரூப்பில் உள்ள அனைத்து அணிகளும் தற்போது நல்ல பார்மில் உள்ளனர். இதனால் இந்த மூன்று அணிகளை இந்தியா சமாளித்து அரையிறுதி ஆட்டத்திற்குள் நுழைவது கடினமான செயல் தான். ஒருவேளை இந்தியா இந்த அனைத்து அணிகளையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2022 T20 உலக கோப்பை பட்டத்தை வெல்லுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.