தமிழகத்தில் குரங்கு அம்மை பரவல்?? சுகாதாரத்துறை அறிக்கையால் நிலைகுலைந்து போன மக்கள்!!

0
தமிழகத்தில் குரங்கு அம்மை பரவல்?? சுகாதாரத்துறை அறிக்கையால் நிலைகுலைந்து போன மக்கள்!!
தமிழகத்தில் குரங்கு அம்மை பரவல்?? சுகாதாரத்துறை அறிக்கையால் நிலைகுலைந்து போன மக்கள்!!

உலகின் பல நாடுகளுக்கும் பரவி உள்ள, குரங்கு அம்மை பரவல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒன்றை தமிழக சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ளது.

 சுகாதாரத்துறை முடிவு :

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா வைரஸ் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸே முடிவுக்கு வராத நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்காவிலிருந்து குரங்கு அம்மை வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. இதுவரை இந்த வைரஸ் 12 நாடுகளில் 80 பேருக்கு பரவியுள்ளது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் போன்ற பல நாடுகளில் இந்த வைரஸ் பரவல் வேகம் எடுத்துள்ளது.

இந்த நிலையில், இந்த வைரஸ் பாதித்த நாடுகளுக்கு கடந்த 21 நாட்களில் சென்று வந்தவர்கள் குறித்த தகவல்களை, அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் சேகரிக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த அம்மை வைரஸ் பாதிப்பால், யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்படும் என்றும், அவர்கள் கட்டாயம் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவ துறையின் திடீர் அறிக்கையால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here